தற்போதைய செய்திகள்

மணப்பாறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள்

DIN

மணப்பாறையில் கிராம கிராமமாக சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கினார் அமைச்சர் வளர்மதி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரமின்றி வறுமையில் இருந்த பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்று ஊராட்சியில் உள்ள 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிராம கிராமமாக சென்று நிவாரண தொகுப்புகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, அதிமுக மாவட்ட பொருளாளர் எம்.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாச்சலம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT