முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பலி 12,573 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,80,532 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2020, 10:15 am IST
பகிர்:

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 13,586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,80,532-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக பெரிய அளவில்13,586-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,63,248 போ் சிகிச்சையில் உள்ளனா். 2,04,711 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

Advertisement

Advertisement

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,20,504 ஆகவும், பலி எண்ணிக்கை 5,751 -ஆக உள்ள நிலையில் தொற்று பாதிப்பில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,838 -ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 52,334  ஆகவும், நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகரம் தில்லியில் இதுவரை  49,979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments