தற்போதைய செய்திகள்

வால்பாறை: கோட்டூர் காவல் நிலையம் சீல் வைப்பு

வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

DIN


பொள்ளாச்சி: வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், பெண் காவலர் ஒருவருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து புதன்கிழமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா, வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து கிருமிநாசினிகள் தெளித்து சீல் வைத்தனர். அங்கு பணிபுரியும் 40 காவலர்களும் கரோனா பரிசோதனை செய்யவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT