கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

DIN


கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதுவரை 23,670 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக புதன்கிழமை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், குஜராத்தில் இருவர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவர் அந்த நோய்த் தொற்றுக்கு நேற்று வியாழக்கிழமை பலியாகினர். புதன்கிழமை நிலவரப்படி அந்த நோய்த்தொற்றால் 606 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக சுமார் 88 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 ரேக் வெளிநாட்டவர்களாவர். 

இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை727 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT