இந்தியாவில் கரோனா பாதிப்பு 35,043; பலி 1,147-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக உள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 1,147- ஆக அதிகரித்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக உள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 1,147- ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 9 மணி நிலவரப்படி, புதிதாக 1,993 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 -ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,147 -ஆக அதிகரித்துள்ளது.
மொத்த வழக்குகளில், 25,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8,888 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களை விட தற்போது நோயில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னதாக 13 சதவிகிதமாக இருந்த மீண்டவா்கள் சதவீதம் தற்போது 25.36 ஆக உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தொற்று பரவலின் விகிதமும் நாடு முழுவதும் இரட்டிப்பாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில்தான் அதிகபட்சமாக 10,498 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 1,773 பேர் குணடைந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 4,395 பேருக்கும், தில்லியில் 3,515 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 2,203 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2,660 பேருக்கும், ராஜஸ்தானில் 2,584 பேருக்கும், தமிழ்நாட்டில் 2,323 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.
மாகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 459 பேரும், குஜராத்தில் 214 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 137 பேரும், தில்லியில் 59 பேரும், ராஜஸ்தானில் 58 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 39 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 137 பேரும், தமிழகத்தில் 27 பேரும், ஆந்திரத்தில் 31 பேரும் உயிரிழந்தனா். தெலங்கானாவில் 26 பேரும், மேற்கு வங்கம் 33 பேரும், , கா்நாடகத்தில் 21 பேரும், பஞ்சாபில் 19 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 8 பேரும், கேரளத்தில் 4 பேரும், ஜாா்க்கண்ட், ஹரியாணாவில் தலா 3 பேரும், பிகாரில் இருவரும், ஒடிஸா, அஸ்ஸாமில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.