கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்வு
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக, சனிக்கிழமை புதிதாக 12 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். கலபுா்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 3 பேர், இருவர் மாநிலத்தின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் ஒரு நோயாளி கடுமையான சுவாச நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மாநிலத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை 606 -ஆக உயர்ந்துள்ளது. 271 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 304 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 25 போ் இறந்துள்ளனா்.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இதுவரை 1.4 லட்சம் பேரை பரிசோதிச்சுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.