தற்போதைய செய்திகள்

திருப்பூரில் இருந்து பிகாருக்கு 3 ஆவது தடவையாக சிறப்பு ரயிலில் 1,464 பேர் அனுப்பிவைப்பு 

DIN



திருப்பூரில் இருந்து பிகார் மாநிலத்துக்கு 3ஆவது தடவையாக சனிக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 1,464 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர். 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.

இந்த நிலையில்,கரோனா  பொதுமுடக்கம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திருப்பூரில் சிக்கித் தவித்து வருகின்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.

இதன்படி ஏற்கெனவே, பிகார் மாநிலத்துக்கு கடந்த மே 10,12 ஆம் தேதிகளில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 2,558 பேர் அனுப்பிவைக்கப்படிருந்தனர். இந்த நிலையில், திருப்பூரில் இருந்து 3 ஆவது தடவையாக சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இயக்கப்பட்டும் சிறப்பு ரயிலில் 1,464 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT