புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 63,624 போ் சிகிச்சையில் உள்ளனா். 45,300 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,002 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,390 பேர் பலியாகியுள்ளனர், 10,318 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தப்படியாக தமிழகத்தில் 13,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் பலியாகியுள்ளனர், குஜராத்தில் 12,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 749 பேர் பலியாகியுள்ளனர், தேசிய தலைநகர் தில்லியில் 11,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 176 பேர் பலியாகியுள்ளனர், 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.