வந்தே பாரத்: 30.9 லட்சம் பேர் நாடு திரும்பினர்
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 30.9 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 30.9 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வந்தே பாரத் திட்டத்தின் 8வது கட்டத்தில் 24 நாடுகளில் இருந்து 763 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1.40 லட்சம் பேர் நாடு திரும்பினர்.
மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இன்று வரை மொத்தம் 30.9 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.