ஏப். 6-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார் இபிஎஸ்!
மு.க. ஸ்டாலின், விஜய், சீமான் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏப். 6 -ல் தாக்கல் செய்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை) செய்யவுள்ளார்.
வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மனுத் தாக்கல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்கள் மூவருமே தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.