தற்போதைய செய்திகள்

குஜராத்தின் 4 நகரங்களில் முழு ஊரடங்கு

ANI

குஜராத் மாநிலம் ஆமதாபாத், ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நவம்பர் 21 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தை அரசு திணிக்காது என முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்த நிலையில் சில நகரங்களுக்கு மட்டும் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என முன்பே அறிவித்தனர்.

இந்நிலையில் துணை முதல்வர் நிதின் பட்டேல் வெளியிட்ட செய்தியில்,

ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் நவம்பர் 21 (சனிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரூபானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT