புதுச்சேரியில் 3 நாள்களுக்கு 144 தடை உத்தரவு
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால் புதுச்சேரியில் 26ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்துள்ளது.
மேலும், இந்தப் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.