முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,464 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,464 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,464 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,464 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 14 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,669 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,797 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,53,332 பேர் குணமடைந்துள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →