முகப்பு
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
தற்போதைய செய்திகள்

‘விவசாயிகளின் பேரணியை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

‘விவசாயிகளின் பேரணியை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:


வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா வழியாக தில்லி அடைந்து போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்த நிலையில், ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் தடுப்புகள் மூலம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹரியாணா அரசின் இச்செயலிற்கு கண்டனம் தெரிவித்து பஞ்சாப் முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

தில்லிக்கு அணிவகுத்துச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் ஹரியாணா அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனோகர் லால் கட்டாரின் அரசு விவசாயிகளை தடுத்து நிறுத்தியது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →