திருச்செங்கோடு அஇஅதிமுக சார்பில் ஓவியப்போட்டி
திருச்செங்கோடு அஇஅதிமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அஇஅதிமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றிய செயலாளர். சதீஷ்குமார், இணைச் செயலாளர்.கணேஷ்குமார், ஓ.ராஜபாளையம் ஊராட்சி செயலாளர். தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர் சிறுமி இருக்கும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி சான்றிதழ் வழங்கி பாராட்டி குழந்தைகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உதவிகள், திட்டங்கள் குறித்து பேசினார்.