உ.பி.யில் அமைச்சருக்கு கரோனா உறுதி
உத்தரபிரதேசத்தின் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
உத்தரபிரதேசத்தின் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அன்றே தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (இன்று) செய்யப்பட்ட மறுசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், விரைவில் நோயில் இருந்து விடுபட்டு பணிக்கு திரும்புவேன் என தெரிவித்தார்.