தற்போதைய செய்திகள்

தெலங்கானா வெள்ளத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம்: முதல்வர்

ANI

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கனாவில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகரம் ஹைதராபாத் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 32 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா முதல்வரிடம் பிரதமர் மோடி புதன்கிழமை பேசுகையில் வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் எழுதிய சுட்டுரையில் கூறியதாவது,

மாநிலங்களில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1,350 கோடி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT