வெங்காய இறக்குமதிக்கு தளர்வு : மத்திய அரசு
நாட்டில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக தற்காலிகமாக டிசம்பர் 15 வரை தளர்வு அளிப்பதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் வெங்காய விலை இந்த வாரம் ரூ. 100-யை கடந்து விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது.