முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் தமாகா சார்பில் பிரணாப் முகர்ஜி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானதையொட்டி ஈரோடு தாமாக சார்பில் அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ஈரோட்டில் தமாகா சார்பில் பிரணாப் முகர்ஜி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி
பகிர்:

ஈரோடு: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானதையொட்டி ஈரோடு தாமாக சார்பில் அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று பிரணப் முகர்ஜி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார். மாநில துணை தலைவர் ஆறுமுகம்  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரகுமார், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா  ஆகியோர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலிக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பிரபாகர், வர்த்தக அணி செயலாளர் சின்னதுரை, பொதுச் செயலாளர் ராம் லட்சுமணன், விவசாயப் பிரிவு சம்பத், சிறுபான்மை பிரிவு தலைவர் முஜாகிதீன் அலி,  இளைஞரணி துணை தலைவர் மாயா வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →