முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 690 பேருக்கு கரோனா

ராஜஸ்தானில் இன்று புதிதாக 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ராஜஸ்தானில் புதிதாக 690 பேருக்கு கரோனா (கோப்புப்படம்)
பகிர்:

ராஜஸ்தானில் இன்று புதிதாக 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 83,853 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,074 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 68,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 14,514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.