FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணசாமி குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

Updated On : 29 மார்ச் 2026, 1:33 pm IST
எடப்பாடி பழனிசாமி - படம்: அதிமுக
பகிர்:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பேரவைத் தேர்தலில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க அதிமுக முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இதனிடையே தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதில், புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் கேட்கிற சீட்டை கொடுக்க முடியுமா? எங்களிடம் 10 சீட் கேட்டார், பிறகு 5 சீட் கேட்டார். பேச்சுவார்த்தை நேரடியாக இல்லை.

Advertisement

Advertisement

வேறு ஒருவர் மூலமாக கேட்டார். நாங்கள் இயலாது என்று தெரிவித்துவிட்டோம். போன முறை எங்கள் கூட்டணியில் அவர் இல்லை. 2021 சட்டப்பேரவைக் கூட்டணியில் அவர் இல்லை. கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அவர்கள் பெற்ற வாக்குகள் அடிப்படையிலேயே சீட் வழங்கப்படும். 31 தொகுதிகள் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறார். அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் முடியாது என்று தெரிவித்துவிட்டோம். இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has responded to the allegations made by k. Krishnasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments