தற்போதைய செய்திகள்

ஜப்பானில் ஆப்பிள் வாட்ச் வரிசை 4, 5-ல் ஈ.சி.ஜி. செயலிக்கு அனுமதி

DIN

ஆப்பிள் வாட்ச் வரிசை 4, 5-ல் ஈ.சி.ஜி. செயலி மற்றும் இதயத்துடிப்பு கணக்கிடும் செயலியை அறிமுகப்படுத்த உள்நாட்டு ஒப்புதலை ஜப்பான் மருத்துவக்குழு வழங்கி உள்ளது.

இந்தச் செய்தியை, ஜப்பானின் மருத்துவ உபகரண முன்னேற்ற அமைப்பு உறிதி செய்துள்ளது. மேலும், முன்பே ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

ஆப்பிள் கைக்கடிகாரம் உபயோகிக்கும் வெளிநோயாளிகளின் ஈ.சி.ஜி. அறிக்கையை ஓச்சனோமி இருதயவியல் துறையினர்  மதிப்பீடு செய்ய உள்ளனர்.

ஈ.சி.ஜி. அம்சமானது ஆப்பிள் கைக்கடிகாரம் வரிசை 4 மற்றும் 5-ல் உள்ளது. இதன்மூலம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் நோயாள் பயனாளி பாதிக்கப்படலாமா என்பதை எளிதில் அறிய முடியும். இதன் அறிக்கை மூலம் பலரின் உயிரைப் பாதுகாக்க முடியும்.

சமீபத்தில், தென் கொரியாவில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி கைக்கடிகாரம் ஆக்டிவ் 2-ல் ஈ.சி.ஜி. செயலி அறிமுகமானது. ஈ.சி.ஜி. செயலியை முன்பே அறிமுகப்படுதாததால் முதல் காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலிஃபோர்னியாவில் பவித்ரா லட்சுமி!

ஸ்குவிட் கேம் - 2 எப்போது?

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

SCROLL FOR NEXT