திருவனந்தபுரம் மாவட்டத்தின் அஞ்சுத்தேங்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் பலியாகினர்.
அஞ்சுத்தேங்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் 5 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில், அகஸ்டின், அலெக்ஸ் மற்றும் நன்றிச்சன் என்ற 3 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கரைக்கு நீந்தி வந்தனர்.
மேலும் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை சிராயின்கீஷ் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.