முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு

ஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
முதல்வர் ஜெய் ராம் தாகூர்
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார்.

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரை சுற்றுலாத் துறையை நம்பி பல குடும்பங்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட இழப்பு குறித்து முதல்வர் தாகூர் கூறுகையில், 

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துறையை நம்பி உள்ள மக்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடுகள் தருவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →