தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு

ANI

ஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார்.

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரை சுற்றுலாத் துறையை நம்பி பல குடும்பங்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட இழப்பு குறித்து முதல்வர் தாகூர் கூறுகையில், 

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துறையை நம்பி உள்ள மக்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடுகள் தருவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT