குஜராத் முன்னாள் முதல்வருக்கு கரோனா
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (வயது 92) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (வயது 92) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காந்திநகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நியாதி லக்கானி கூறுகையில், கடந்த வியாழக்கிழமை கேசுபாயின் உதவியாளருக்கு தொற்று உறுதியானதை அடுத்து இவருக்கு பரிசோதானை செய்யப்பட்டது. இந்த பரிசோதானையில் இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவரது ஆண்டிஜென் சோதனை தொற்று இருப்பது உறுதி செய்துள்ளது. மேலும், பிசிஆர் சோதனைக்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து கேசுபாய் அவரது இல்லத்திலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.