விபத்துக்குள்ளான டிபி-20 ரக பயிற்சி விமானம் 
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பயிற்சி விமானம் விபத்து : ஒருவர் பலி

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் பயிற்சி நிறுவனத்தின் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ANI

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் பயிற்சி நிறுவனத்தின் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அமேதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உதான் அகாடமி மையத்தைச் சேர்ந்த பறக்கும் பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான டிபி-20 ரக பயிற்சி விமானத்தை ஹரியாணாவைச் சேர்ந்த கொங்கர்க் சரண் என்ற விமானி இயக்கியுள்ளார்.

இந்த விமானமானது, அசாம்கர் மாவட்டத்தின் குஷ்வாபுரவா கிராமத்திற்கு அருகே இன்று காலை 11.20 மணியளவில்  சென்ற போது திடீரென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானி உயிரிழந்தார். மேலும், விமானத்தில் பயணம் 3 பேர் வெளியே குதித்து உயிர் தப்பியதாக தெரிவித்தனர்.

மேலும் விபத்து நடந்ததைக் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT