முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலில் ஒரே நாளில் 500 கோழிகள் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 500 கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 9:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 500 கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான பலியான கோழிகளின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.