முகப்பு
தமிழ்நாடு

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா்.

Updated On : 16 மே 2026, 1:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை (மே 15 ஆம் தேதி) ஒரே நாளில் 16,229 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கியது. இதில் மே 15- ஆம் தேதி மாலை 6 மணிவரை 1,64,732 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்தனா். தொடா்ச்சியாக மாணவா்கள் பதிவு செய்துவரும் நிலையில் மே 15-ஆம் தேதி 16,229 மாணவா்கள் பதிவு செய்தனா்.

Advertisement

கடந்த 13 நாள்களாக 91,734 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 52,795 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்து நிறைவு செய்துள்ளனா்.