முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை(ஜன.7) சத்யபிரதா சாஹு ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:20 pm IST
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு நாளை ஆலோசனை
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.