ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோத்பூரில் உள்ள பாலோடி சிறையில் ஞாயிற்றுக்கிழமை 16 கைதிகள் தப்பியோடினர்.
இந்த சம்பவத்தை அடுத்து பாலோடி சிறையின் காவல் அதிகாரிகள் 4 பேரை அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தப்பியோடிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.