தில்லியில் அதிகரிக்கும் கரோனா: 5000-ஐ கடந்த இன்றைய பாதிப்பு
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,85,062 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2340 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 17 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,56,617 பேர் குணமடைந்துள்ளனர், 11,113 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 17,332 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.