தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்கம்? இரவு 8.30 மணிக்கு முதல்வர் உரை

ANI

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கரோனா தொற்றை இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், தொற்றின் பரவல் குறையவில்லை.

இதனிடையே, மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்களிடம் உரையாற்றப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த உரையின்போது, மீண்டும் பொதுமுடக்கம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT