முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

மகாராஷ்டிரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி நேற்று மக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே இன்று(ஏப்.14) இரவு 8 மணிமுதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"திரையரங்குகள், அரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது.

வணிக வளாகங்கள் செயல்படாது. அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது."

இதையடுத்து, 144 தடை உத்தரவானது மாநிலம் முழுவதும் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில், முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →