முகப்பு
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: தில்லி முதல்வர் கோரிக்கை

பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும் என மத்திய அரசிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது; கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்: அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும் என மத்திய அரசிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தில்லி முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் கூறியதாவது,

பத்திரிகையாளர்கள் கரோனா பரவலுக்கு மத்தியில் பணி செய்து வருகிறார்கள். அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி தடுப்பூசியில் முன்னிரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.