முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,449 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,449 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,71,384ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2,636 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 33 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,032ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,96,759 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 61,593 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →