மேற்கு வங்க 5-ம் கட்ட சட்டப்பேரவையின் 4 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்க 5-ம் கட்டத் தேர்தலில், 4 மணி நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.