தற்போதைய செய்திகள்

மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி திரிணமூல் கடிதம்

ANI

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

நாடு முழுவதும் கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் அடுத்த 3 கட்டத் தேர்தல்களையும் இணைத்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT