‘மத்திய அரசு அனைத்து உதவிகளும் வழங்கும்’: மாநில அரசுகளுக்கு மோடி உறுதி
கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போதைய செய்திகள்‘மத்திய அரசு அனைத்து உதவிகளும் வழங்கும்’: மாநில அரசுகளுக்கு மோடி உறுதி
கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதையடுத்து மாநிலங்களில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் தரப்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மோடி உறுதியளித்துள்ளார்.