18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம்: கர்நாடக முதல்வர்
கரோனா தடுப்பூசி வந்த பின்பு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி வந்த பின்பு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கர்நாடகத்திற்கு கரோனா தடுப்பூசி இதுவரை வரவில்லை. தடுப்பூசி வந்த பிறகு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழகத்திலும் நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.