தற்போதைய செய்திகள்

தேஜஸ் ரயில்: கொடை ரோடுக்கு பதிலாக திண்டுக்கலில் நின்றுசெல்லும்

DIN


சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேஜஸ் ரயிலானது, சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 6 மணிக்கு கிளம்பும், அதேபோல் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு கிளம்பும். இந்த ரயிலானது திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே வழக்கமாக நின்றுசெல்லும்.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT