கரோனா தடுப்பூசி 
தற்போதைய செய்திகள்

தடுப்பூசி விற்பனை எப்போது? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

கரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

கரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று இரண்டாம் முறையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் இயக்குநர் கரோனா தடுப்பூசி விற்பனை குறித்து கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

முன்களப் பணியாளர்கள் மற்றும் பிரதான நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு, போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில் தான் திறந்தவெளி சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு இறுதி அல்லது அதற்கு முன்பாக திறந்தவெளி சந்தையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறினார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை 87.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT