கேரளத்திலிருந்து புணே வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்
கேரள மாநிலத்திலிருந்து புணே வருபவர்களுக்கு கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக புணே மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து புணே வருபவர்களுக்கு கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக புணே மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் 5,000 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.
இதனையடுத்து புணே மாநகராட்சி பகுதியில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கேரள பயணிகள் புணே வருவதற்கு முன்பு பரிசோதனை செய்து கரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்குமுன், கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசு இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.