முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
கோப்புப்படம்
பகிர்:


சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அடுத்த சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்த நிலையிலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.