முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓமனில் உள்ள மகளை மீட்க மத்திய அரசுக்கு பெற்றோர் வேண்டுகோள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை ஓமானில் இருந்து அழைத்து வர உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை ஓமானில் இருந்து அழைத்து வர உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஃபர்ஹீன் பேகம் என்ற பெண்ணிற்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தங்களது மகளை, அவரது கணவர் கொடுமைபடுத்துவதால் இந்தியா மீட்டு வர உதவுமாறு மத்திய அரசிற்கு பெண்ணின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  ஃபர்ஹீன் பெற்றோர் கூறுகையில்,

எங்களது மகளுக்கு திருமணமாகி 5 நாள்களுக்குள் மஸ்கட் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சென்ற பிறகு தான் அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. ஃபர்ஹீனை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வருகிறார். எனவே, எங்களது மகளை விரைவில் இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →