தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்

DIN

நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதையடுத்து, நேற்று முதல் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 5 அணைகளிலிருந்து 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. அதிகபட்சமாக மணிமுத்தாறிலிருந்து 25,000 கனஅடி மற்றும் பாபநாசத்தில் 23,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT