முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் புதிதாக 5 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி: மத்திய அரசு

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
நாட்டில் புதிதாக 5 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி: மத்திய அரசு
பகிர்:

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹரியாணா, ஹிமாச்சல், கேரளம் உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், புலம்பெயர் பறவைகளால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பறவைகளுக்கும் தொற்று பரவி வருகின்றது. இதை தடுக்கும் வகையில் உயிரிழந்த பறவைகள் கண்டெடுக்கும் சுற்றுப் புறத்தில் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்து வருகின்றனர்.

புதன்கிழமை புதிதாக 5 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

நாட்டில் 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக ஜம்மு - காஷ்மீரில் ஒரு மாவட்டத்திலும், ஜார்கண்டில் 4 மாவட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பறவைக் காய்ச்சல் தொடர்பாக பரவும் வதந்திகளை தவிர்பதற்காக, கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வது குறித்து மாநிலங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →