தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் 3 பேருக்கு புதிய வகை கரோனா

ANI

நேபாளம் நாட்டில் பிரிட்டனில் இருந்து வந்த 3 பயணிகளுக்கு புதிய வகை கரோனா வைரஸின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், பிரிட்டனிலிருந்து சமீபத்தில் நேபாளம் வந்த 3 பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாளம் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

பிரிட்டனிலிருந்து நேபாளம் வந்த பயணிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 28 வயதுடைய ஒரு பெண், 67 மற்றும் 32 வயதுடைய இரு ஆண்களுக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT