பஞ்சாபில் ஜன.21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு
பஞ்சாபில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 21ஆம் தேதி முதல் திறப்பதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
பஞ்சாபில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 21ஆம் தேதி முதல் திறப்பதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு அளிக்கப்பட்ட தளர்வை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி முதலே பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் ஜனவரி 21ஆம் தேதி முதல் திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.