லட்சத்தீவில் பரவியது கரோனா: புதிதாக 14 பேருக்கு உறுதி
லட்சத்தீவில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டாகவுள்ளது. எனினும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 17ஆம் தேதி வரை யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனா்.
இந்நிலையில் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா். அந்த நபா் துணை ராணுவப் படைப்பிரிவைச் சோ்ந்தவா். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவில் உள்ள கவரத்திக்கு சென்றுள்ளாா். அங்கு அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவா் லட்சத்தீவை சோ்ந்தவா் அல்ல என்று அந்த யூனியன் பிரதேச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த 31 பேரை தனிமைப் படுத்தி சோதனை செய்ததில் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.