நாட்டில் முதல் மாநிலம்: கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி
நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கின. இதுவரை நாடு முழுவதும் நேற்று மாலை 7.30 மணிவரை 16,13,667 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் அதிக பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக கர்நாடகம் உள்ளது. மேலும், இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி மாநிலத்தில் 2,06,577 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.